உன் விழிகளில்!!!

கோவில் மணியாய் என்
குரல் கேட்டதும்
கோபுரம் பறவைகளாய் உன்
இமைகள் படபடக்கும் - அந்த
அழகைக் காணவே
ஆயிரம் முறை உன்
பெயர் சொல்லி அழைப்பேனே
ஆருயிரே!!!

நீ... நிலா!

நீ சிரிக்காவிட்டாலும் நான் வருந்துவதில்லை! வெண்ணிலா எப்போதும் சிரித்துகொண்டா இருக்கிறது?

தொண்டன்!!!

கூலிக்குச் செல்லும் தொண்டன் தலைவன் வருகையால் கொடியேற்றச் சென்றான்! கட்சிக் கொடியோ பறந்தது காற்றில் பசி எனும் இடியோ இறங்கியது வயிற்றில்!!!

கானல்!!!

உன் காதல் சாரலில் நனைய விரும்பினேன்! ஆனால் ஏனோ நீ கானல் நீராய் கண்களுக்கு மட்டுமே காட்சியாய்!

மௌனம்!!!

புரிந்த மொழி புரியாத பொருள் என்னவளே உன் மௌனம்!!!

சங்கமம்...

கீதம் ராக தாளங்களின் சங்கமம்... ஓவியம் நிஜ நிழல்களின் சங்கமம்... மௌனம் எண்ணத் தேடல்களின் சங்கமம்....