கோவில் மணியாய் என்
குரல் கேட்டதும்
கோபுரம் பறவைகளாய் உன்
இமைகள் படபடக்கும் - அந்த
அழகைக் காணவே
ஆயிரம் முறை உன்
பெயர் சொல்லி அழைப்பேனே
ஆருயிரே!!!
நீ... நிலா!
கனா கண்டவள் -
காயத்ரி
on Sunday, September 9, 2007
/
Comments: (1)
நீ சிரிக்காவிட்டாலும்
நான் வருந்துவதில்லை!
வெண்ணிலா எப்போதும்
சிரித்துகொண்டா இருக்கிறது?
தொண்டன்!!!
கனா கண்டவள் -
காயத்ரி
/
Comments: (4)
கூலிக்குச் செல்லும் தொண்டன்
தலைவன் வருகையால்
கொடியேற்றச் சென்றான்!
கட்சிக் கொடியோ பறந்தது காற்றில்
பசி எனும் இடியோ இறங்கியது வயிற்றில்!!!
கானல்!!!
கனா கண்டவள் -
காயத்ரி
/
Comments: (3)
உன் காதல் சாரலில்
நனைய விரும்பினேன்!
ஆனால் ஏனோ நீ
கானல் நீராய்
கண்களுக்கு மட்டுமே காட்சியாய்!
மௌனம்!!!
கனா கண்டவள் -
காயத்ரி
on Saturday, September 8, 2007
/
Comments: (2)
புரிந்த மொழி
புரியாத பொருள்
என்னவளே உன் மௌனம்!!!
சங்கமம்...
கனா கண்டவள் -
காயத்ரி
on Friday, September 7, 2007
/
Comments: (2)
கீதம் ராக தாளங்களின் சங்கமம்...
ஓவியம் நிஜ நிழல்களின் சங்கமம்...
மௌனம் எண்ணத் தேடல்களின் சங்கமம்....