இறகைப்போலே...!
கனா கண்டவள் -
கவிநா...
on Sunday, November 28, 2010
/
Comments: (9)
தவழ்ந்துவரும் காற்றில் மிதந்து
திசைகளெங்கும் திரியும்
இறகைப்போலே...
பிரியங்களைச் சுமந்த
என் எண்ண அலைகள்
உன் சுவாசக்காற்று தேடி வருகிறது...
மனவாசல் திறந்து வைக்க
மறவாதே...!
நம்பிக்கை
கனா கண்டவள் -
கவிநா...
on Wednesday, November 24, 2010
/
Comments: (7)
பேருந்து நிறுத்தத்தின்
பெருநெரிசலில்
கிடைத்ததொரு சிறுமூலையில்
கடை விரித்துக் காத்திருக்கும்
கிழவியின் கண்களில்...
இரவுகள்...
கனா கண்டவள் -
கவிநா...
on Friday, November 12, 2010
/
Comments: (10)
சயனம் தொலைத்தே
சரிகின்றன என் இரவுகள்...
குருதியில் தோய்த்த
என் கனவுகளைக் கவர்ந்து
விடிகிறது வானம்...
எப்போதும் போல்
என்னைக்கடந்துபோகும் மேகங்களுக்குள்
இரக்கமற்ற புன்னகையுடன் நீ...!
தீபாவளித் திருநாள்!
கனா கண்டவள் -
கவிநா...
on Wednesday, November 3, 2010
/
Comments: (6)
நண்பர்கள், சகோதரர்கள் அனைவருக்கும் என் இதயங்கனிந்த தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்....
என்றும் அன்புடன்
உங்கள் தோழி,
கவிநா....