இறகைப்போலே...!

















தவழ்ந்துவரும் காற்றில் மிதந்து
திசைகளெங்கும் திரியும்
இறகைப்போலே...

பிரியங்களைச் சுமந்த
என் எண்ண அலைகள்
உன் சுவாசக்காற்று தேடி வருகிறது...

மனவாசல் திறந்து வைக்க
மறவாதே...!

நம்பிக்கை



















பேருந்து நிறுத்தத்தின்
பெருநெரிசலில்
கிடைத்ததொரு சிறுமூலையில்
கடை விரித்துக் காத்திருக்கும்
கிழவியின் கண்களில்...


குறும்பா ...




சாவு வீட்டிலும் சந்தோசம்
எச்சில் இலை கண்ட
நாய்களுக்கு...

இரவுகள்...
























சயனம் தொலைத்தே
சரிகின்றன என் இரவுகள்...

குருதியில் தோய்த்த
என் கனவுகளைக் கவர்ந்து
விடிகிறது வானம்...

எப்போதும் போல்
என்னைக்கடந்துபோகும் மேகங்களுக்குள்
இரக்கமற்ற புன்னகையுடன் நீ...!

தீபாவளித் திருநாள்!





















நண்பர்கள், சகோதரர்கள் அனைவருக்கும் என் இதயங்கனிந்த தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்....

என்றும் அன்புடன்
உங்கள் தோழி,
கவிநா....