கண்ணீர் கடிதம்!!!




மறக்க முடியாத மந்திரப் பொழுதுகள்
என் மனதில் மல்லிகையாய் மணம்வீசுகின்றன.
மந்திரத்தில் கட்டுண்டு கிடந்த மனதின்
மயங்கிய தருணம் உன் நினைவுகள் வருடுகிறது.
வருடிய நினைவுகள் தென்றலாய் தழுவுகிறது.
தென்றல் தழுவும்போது மொட்டுக்கள் திறக்கலாம்
ஆனால், உன் நினைவுகள் தழுவும்போது கண்ணீர்
முத்துக்கள் பிறக்கின்றன.
கண்ணீர் முத்துக்கள் கன்னம் வருடும் வேளை
சோகம் அனைத்தும் தண்ணீராய் ஓடிச்சென்று
உள்ளக் கிணற்றில் நிறைகிறது.
ஊசித் தூறலில் உடல் கீறும் குளிராய் உன்
மறுதலிப்பு வார்த்தைகள் என் உயிர் கீறி வதைக்கிறது.
சுகம் தரும் இளவெயிலாய் உன் சம்மதம் எனைச் சேராதா?