மஞ்சள்வெயில் மாலையில்
மெல்ல நகரும் முகில்கள்...
காற்றோடு
பட்டும் படாமலும்
தொட்டும் தொடாமலும்
உரசிச்செல்வதைப்போல
என் நெஞ்சமெங்கும்
உன் நினைவுகள்...
சோப்புக்குமிழிகளாய்
உயிர்பெறும் உன் நினைவுகளைச்
சிறுகுழந்தையாகிச் சிலாகிக்கிறேன்...
உடைந்துவிடும் எனத்தெரிந்தும்...