௨ ௪ ௭...



















ஒவ்வொரு பொழுதும்
ஓடோடி வந்து

காதோரக் கூந்தல்
கலைத்துப் பேசிய கொஞ்சல்களும்...

உடல் சிலிர்க்கச் செய்த
குளிர் தீண்டல்களும்...

ஆடை கலைத்துச்
சீண்டிய செல்லக்குறும்புகளும்...

இன்னும்...

சுவாசமாகிச் சேர்ந்து
உதிரத்தில் உயிர் வரைந்த

காற்றே!!!

உன்னைக் காதலிக்கிறேன்....


தலைப்புக் குறிப்பு : ௨ ௪ ௭ (2 4 7 - நான் உன்னைக் காதலிக்கிறேன்) 


Image Courtesy : Google

இ(க)யலும் இசையும்...!

















தண்ணீர் குளத்தில் என்
கண்ணீர் கரைய
காலமெல்லாம் நீந்தியும்
கரை விரும்பாக் கயல் நான்...

இமைக்காத விழிகளின்
பாரம் தீர
இசைக்கவந்தாயோ நீருக்குள் ராகம்...!

கண்ணீருக்கு மருந்தாக
கவலைக்கு விருந்தாக
தனிமைக்குத் துணையாக

சோகம் உடைத்து
ஸ்வரம் பாட
என் தேவன் தந்த வீணையோ நீ!!!


Image Courtesy : Google

குறும்பா...














குடைக்குள் மழை
ஏழையின்
வறுமைப் பிழை...



Image Courtesy : Google

பார்வை....!



பற்றவைக்கப்படாத
தீக்குச்சியாய்


மிரட்டிக்கொண்டிருந்த
நினைவுகளைப்
பட்டென்று உரசிச்
சாம்பலாக்கியது 


உன் பார்வை....!



Image Courtesy : Google

மழைக்காலம்...!



எறும்பின் வாயில்
கிட்டிய உணவாய்...

உன் நினைவுகளனைத்தும்
என் இதயக்கிடங்கின் சேமிப்பில்...

எந்த நேரமும் வரலாம்
கண்ணீர் மழைக்காலம்...!


Image Courtesy : Google