ஒவ்வொரு பொழுதும்
ஓடோடி வந்து
காதோரக் கூந்தல்
கலைத்துப் பேசிய கொஞ்சல்களும்...
உடல் சிலிர்க்கச் செய்த
குளிர் தீண்டல்களும்...
ஆடை கலைத்துச்
சீண்டிய செல்லக்குறும்புகளும்...
இன்னும்...
சுவாசமாகிச் சேர்ந்து
உதிரத்தில் உயிர் வரைந்த
காற்றே!!!
உன்னைக் காதலிக்கிறேன்....
தலைப்புக் குறிப்பு : ௨ ௪ ௭ (2 4 7 - நான் உன்னைக் காதலிக்கிறேன்)
Image Courtesy : Google
11 comments:
அருமை !
குறிஞ்சி குடில்
nallarukku.
@ குறிஞ்சி
நன்றி சகோ... வருகைக்கும் வாழ்த்துக்கும்... மீண்டும் வருக..
@ லோகு
மிக்க நன்றி சகோ... மீண்டும் வருக...
நல்ல ரசனை! நீரை விலை கொடுத்து வாங்குகிறோம்! நீங்கள் பாடிய காற்றை ?!!!!!
அருமையான வரிகளுடன் கடைசி வரியில் நல்ல திருப்பம்..ரெம்ப நல்லா இருக்கு..முக்கியமா..
//சுவாசமாகிச் சேர்ந்து
உதிரத்தில் உயிர் வரைந்த/
இந்த வரி ரெம்ப பிடிச்சி இருக்கு..
@ தென்றல் சரவணன்
// நீரை விலை கொடுத்து வாங்குகிறோம்! நீங்கள் பாடிய காற்றை ?!!!!! //
"ஒரு காலத்தில் பிராணவாயு இலவசமாகக் கிடைக்கும்" என வரும் சந்ததியினருக்கு கதை சொல்லும் காலம் வந்தாலும் வரலாம் தோழி... :(
கருத்துக்கு நன்றி தென்றல்...
@ கணேஷ்
ம்ம்ம்... எனக்கும் பிடித்த வரிகள்... :)))
மிக்க நன்றிங்க கணேஷ்.....
௩ ௫
///காதோரக் கூந்தல்
கலைத்துப் பேசிய கொஞ்சல்களும்...
உடல் சிலிர்க்கச் செய்த
குளிர் தீண்டல்களும்...//
கவிதையின் அழகு காற்றை மட்டும் காதலிக்கச் செய்யவில்லை கவிநா வின் வரிகளையும்...வாழ்த்துகள்...தோழி....
nice kavi- vungal kavi....
Post a Comment
உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...