பிரிவுத்தூறல்...!
கனா கண்டவள் -
கவிநா...
on Tuesday, October 26, 2010
/
Comments: (8)
தூறும் மழைச்சாரலும்
உன் புன்னகையும்
ஒன்றெனவே தோன்றியது
நம்முடன் கைகோர்த்து நாட்கள் நடந்தபோது...
இன்று...
நாட்காட்டிக் காகிதங்கள்
என்னைக் கிழித்துத்
தன்னைத் தொலைக்கிறது...
இன்றும் உன்னை ஒப்பிடுகிறது மனது...
வெடித்துக்கிடக்கும் நிலத்தைப்பார்த்து
வெளிரிச்சிரிக்கும் மேகத்தோடு...!