நேற்றிரவு பெய்த மழை!



















நேற்றிரவு பெய்த மழையில்


தலை துவட்டிக்கொண்ட அடர்மரங்கள்
குளித்து அழுக்ககற்றிக்கொண்ட சாலைகள்
புகைப்படலம் நீங்கிய கட்டிடச்சுவர்கள்
பூத்துச்சிரிக்கும் வேலியோர மலர்ச்செடிகள் 

தேங்கியிருக்கும் நீரில் குதித்து
விளையாடிக்களிக்கும் சேரிச்சிறுவன்

வேதனை....

மழைக்குமில்லை
மழலைச் சிறுவனுக்குமில்லை...




மௌனமழை...!
















நிதமும் தான் நான்
நனைகிறேன் என்றாலும்....

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு அர்த்தங்களைப்

பொழிகிறது உன் மௌனம்...


Image Courtesy :- Google

குறும்பா...!












உள்ளக் கவலை  துடைக்கும்
உப்புத்தண்ணீர்
கண்ணீர்...












வசந்தத்திற்கும்
வறுமையோ
...கோடை வெயில்


Image Courtesy :- Google

ஓர் இதயத்தவம்...!


























உன் நினைவுகளைப் பதியமிட்டு
கண்ணீரூற்றி வளர்க்கிறது பிரிவு...
நம் காதலை...

என் முட்பாதையிலும்
பூக்கள் முளைக்கிறது...

இந்தப் பாலை மனத்திலும் 
சோலை மணக்கிறது...

உணர்வுக்கருவில் 
உதித்த இம்மலருடன் 
உனக்கெனச் செய்வேன்
ஓர் இதயத்தவம்...

நீ வரும் வழி நோக்கி...!!!


Image Courtesy:- Google.