நினைவுகளின் மனனம் |
கனவுகளின் பயணம் |
ஆசைகளின் ஜனனம் |
ஆன்மாக்களின் சரணம் |
காதல் ஒரு புதினம்!... |
காதல் நினைவே!
கனா கண்டவள் -
காயத்ரி
/
Comments: (13)
உன் நினைவுகளைத் தேடிப் |
பயணிக்கிறது என் நெஞ்சம்… |
காரிருள் மெளனத்தைச் |
சுமந்த கருவேலங்காட்டின் |
அடர்ந்த நிழல் வடிகட்டி அனுப்பிய |
சன்ன வெயிலாய்… |
மேகங்களைத் தொட்டுவிட்ட |
மலையின் மேனியைத்தொட்டு |
பூத்துச் சிரிக்கும் மலர்களின் |
புன்னகையை வருடிவந்து |
சலசலக்கும் நீரோடையாய்… |
ஆள் அரவமற்ற கானகத்தில் |
அடர்ந்து படர்ந்து |
பாரியிடம் தேர் பெற்ற |
முல்லைக் கொடியில் முகிழ்த்த |
முதல் பூவாய்… |
என்றும் சுகமாயும் சுகந்தமாயும் |
உணர்கிறேன் உன் நினைவுகளை… - நீயும் |
கவர்கிறாய் என் கனவுகளை…. |
பாதங்கள்…
கனா கண்டவள் -
காயத்ரி
/
Comments: (4)
கருவறையை உதைத்து |
கவலைகளை உடைத்து |
அறிவைத் தேடி அன்பைத் தேடி |
ஒரு பயணம்… |
கல்வியைத் தேடி காதலைத் தேடி |
ஒரு பயணம்… |
பொருளைத் தேடி புகழைத் தேடி |
ஒரு பயணம்… |
பொறுப்புகள் சுமந்து புண்ணியம் தேடி |
ஒரு பயணம்… |
கருவறை தொடங்கி |
கல்லறை நோக்கி |
பாதங்களின் பயணம்… |
தேடல்களின் பயணம்… |
காலத்தின் மறதி....
கனா கண்டவள் -
காயத்ரி
/
Comments: (4)
காலம் மறக்கச்செய்ய மறந்துவிட்ட |
பல நினைவுகளின் எச்சங்கள் |
மனதின் மூலையில் மலைக்குன்றாய் |
பாதையில் வரும் |
பனிக்காற்றும் பூஞ்சோலைகளும் |
முட்செடிகளும் புதர்காடுகளும் |
தோண்டிப் பார்க்கவே செய்கின்றன |
புதைந்திருக்கும் நினைவுகளை |
எனக்கான ஒவ்வொரு |
விடியல்களிலும் பொழுதுகளிலும் |
காலதேவன் முன் மண்டியிட்டு மன்றாடுகிறேன் |
அத்தனை நினைவுகளையும் அள்ளிச்செல் என |
ஆனாலும் நினைவெச்சங்கள் எச்சங்களாகவே |
நிகழ்வின் கணங்களை அச்சுறுத்திக் கொண்டே…. |
நிஜத்திற்காக…
கனா கண்டவள் -
காயத்ரி
/
Comments: (12)
பார்வை தொடும் தூரத்தில் |
பாவை நீ இருந்தும் - இந்த |
பாவி மனம் உன்னை நினைப்பதிலேயே |
நெடுங்காலம் கழிக்கிறது |
உன் மெளனம் மொழியாகிட |
விழிகள் கவிபாடிட |
நிகழப்போகும் நிஜத்திற்காக |
காத்திருக்கும் என் மனம் |
பல கனவுகளோடு…. |