கவிதை தேடும் என் நெஞ்சம் உன் கண்களில் முடிகிறது! அழகைத் தேடும் என் நெஞ்சம் உன் இதயத்தில் முடிகிறது! அமைதி தேடும் என் நெஞ்சம் உன் மெளனத்தில் முடிகிறது! இசையைத் தேடும் என் நெஞ்சம் உன் மொழியில் முடிகிறது! என்னைத் தேடும் என் நெஞ்சம் அது உன்னில் முடிகிறது!!!
விரிந்த உன் இதழ்கள் விவரிக்கும் முன் தெரிவித்துவிட்டன காவியம் பேசும் உன் கண்கள்! நீ என்னைத் தேடி வந்ததையும்! காதல் எண்ணத்தோடு வந்ததையும்! இன்னும் ஏன் மெளனமடி???
அன்பே! உன்னிடம் நான் பேச நினைக்கும் வார்த்தைகளை விண்மீன்களாய் சிதற விட்டிருக்கிறேன் வானெங்கும் என்றாவது ஓர் நாள் மழைக்கால மேகமாய் வந்து அள்ளிச் செல்லமாட்டாயா என்று!!!