ஓர் இதயத்தவம்...!


























உன் நினைவுகளைப் பதியமிட்டு
கண்ணீரூற்றி வளர்க்கிறது பிரிவு...
நம் காதலை...

என் முட்பாதையிலும்
பூக்கள் முளைக்கிறது...

இந்தப் பாலை மனத்திலும் 
சோலை மணக்கிறது...

உணர்வுக்கருவில் 
உதித்த இம்மலருடன் 
உனக்கெனச் செய்வேன்
ஓர் இதயத்தவம்...

நீ வரும் வழி நோக்கி...!!!


Image Courtesy:- Google.