உன் நினைவுகளைப் பதியமிட்டு
கண்ணீரூற்றி வளர்க்கிறது பிரிவு...
நம் காதலை...
என் முட்பாதையிலும்
பூக்கள் முளைக்கிறது...
இந்தப் பாலை மனத்திலும்
சோலை மணக்கிறது...
உணர்வுக்கருவில்
உதித்த இம்மலருடன்
உனக்கெனச் செய்வேன்
ஓர் இதயத்தவம்...
நீ வரும் வழி நோக்கி...!!!
Image Courtesy:- Google.