என்னவளே!
சொல்லத்தெரியாத என்
காதலைப் பற்றி
விழித்தே இருக்கும் என்
விழியைக் கேளடி!
நினைத்தே கிடக்கும் என்
நெஞ்சத்தைக் கேளடி!
புசிக்காமலே இருக்கும் என்
பசியைக் கேளடி!
மௌனித்தே இருக்கும் என்
மொழியைக் கேளடி!
இதனைத் தெரிந்தும்
தெரியாமல் நடிக்கும்
உன் இதயத்தைக் கேளடி!
நான் சொல்லாமலே அறிவாய்
என்
உன்
நம்
காதலை....
கடலும் காதலியும்...!
கனா கண்டவள் -
காயத்ரி
/
Comments: (2)
கடற்கரைக் காற்றாய்
அவளின் சுவாசம்...
கடற்கரை நிலவாய்
அவள் கண்களின் குழுமை...
கடலலையாய் தவழும்
அவள் முதுகில் கூந்தல்...
ஆழ்கடலின் வலம்புரியாய்
அவள் அழகுத் தேன்குரல்...
கடலுக்கும் என் காதலிக்கும்
என்ன சம்பந்தம்?!
நான் முழுவதுமாய் மூழ்கிவிட்டேன்
அவள் இதயக்கடலின் ஆழத்தில்...
அவளின் சுவாசம்...
கடற்கரை நிலவாய்
அவள் கண்களின் குழுமை...
கடலலையாய் தவழும்
அவள் முதுகில் கூந்தல்...
ஆழ்கடலின் வலம்புரியாய்
அவள் அழகுத் தேன்குரல்...
கடலுக்கும் என் காதலிக்கும்
என்ன சம்பந்தம்?!
நான் முழுவதுமாய் மூழ்கிவிட்டேன்
அவள் இதயக்கடலின் ஆழத்தில்...