கனவுகள் கவர்ந்த உறக்கம்...































எங்கோ இலக்கின்றிச் செல்லும்
பறவையின் நுனிச்சிறகைப்
பிடித்துக்கொண்டு பறப்பதாக ஒரு கனவு...

இருண்மை தேசத்தில்
வெடித்தெழும்பும் ஒளிப்பிரளயத்தினின்று
தேவதை உதிப்பதாக ஒரு கனவு....

கைப்பறித்து  மண்ணிலிட்ட விதை
நீர் விடும் முன்  நெடுமரமாக
நிமிர்வதாய் ஒரு கனவு...

கனவின் பொருள் புரியாமல்
சாமத்தில் விழித்தெழும்
சாபம் பெற்றவளாய் நான்...

மழை...















உள்ளத்து ஆசைதனை
மண் சேர்க்கத்துடிக்கும்
மேகத்தின்
கண்ணீர் விடு தூது...!

விழியோரம்
















உன் நினைவுகளென்ன
சுமைதாங்கியா!

வருடிச்சென்றதும்
வழிந்தது பாரம்

விழியோரம் ஈரமாய்....!

தூறல்...





சாலைக்குழியில் தஞ்சமடைந்த
மழை நீரும்
அதனை அலைபாயவைக்கும்
மரத்தூரலுமாய்

என் இதயமும்...
உன் காதலும்...