கனவோடு வா...





விளக்கு உமிழும் வெளிச்சத்தில்
நிறம் மாறும் சுவர்ப்பூச்சு...

ஓயாமல் சுழன்று
பெருமூச்செறியும் மின் விசிறி...

காற்றின் வேகத்தில் படபடத்துச்
சிரிக்கும் நாட்காட்டிக் காகிதங்கள்...

அயராது உழைக்கும்
கடிகார முட்களின் காலடி ஓசை...

என,

உயிரற்ற பொருட்களெல்லாம்
உயிர்ப்புடன் உலவிக்கொண்டிருக்க...

என் உறக்கத்திற்கும் உயிர்கொடுக்க
உன் கனவுகளைப் பரிசளித்தது இந்த இரவு...!

இரவோடு வரும் கனவோடு வா உயிரே...!!!