மேகக்காதலி...!
கனா கண்டவள் -
காயத்ரி
on Monday, April 26, 2010
/
Comments: (16)
மிதக்கும் மேகங்களில்
ஒருத்தியாய் நான்...
காற்றின் அசைவுக்கு நகர்வதாய் - உன்
காதலின் அசைவுக்கு இசைகிறேன்...
உன்னில் பருகிய காதலை
மண்ணில் பொழிகிறேன் மழையாக...
மண்ணைச்சேர்ந்த காதல் மழை
மீண்டும் என் மடிசேர்கிறது...
இதோ...
மிதக்கும் மேகங்களில் ஒருத்தியாய்
மீண்டும் நான் - உன்
காதலைப் பருகப்பருக...
தீராத தாகத்தில்...
படம் உதவி - நன்றி நண்பர் விஷ்ணு...
கொலுசு...!
கனா கண்டவள் -
காயத்ரி
on Saturday, April 24, 2010
/
Comments: (10)
என்ன தவம்தான்
செய்து வந்ததோ...?! - உன்
வெள்ளிக்கொலுசுகள்...
துள்ளி விளையாடும் -
உன் பாதங்களைக்
கிள்ளி உறவாடிக்களிக்கிறதே...!!!
காதல் சிற்பம்!
கனா கண்டவள் -
காயத்ரி
on Sunday, April 18, 2010
/
Comments: (23)
கருவிழிக் கணைபட்டு
உருகியது எனதுள்ளம்...!!!
வழிகின்ற இதயத்தை வழித்தெடுத்து
வடித்துத் தருவாயா
களங்கமில்லாக் காதல் சிற்பத்தை...?
என்
ஆயுள் மேடை
ஆயத்தமாயிருக்கிறது...
அலங்கரிக்கவரும்
அற்புதக்காதலை நோக்கி...