| காலம் மறக்கச்செய்ய மறந்துவிட்ட |
| பல நினைவுகளின் எச்சங்கள் |
| மனதின் மூலையில் மலைக்குன்றாய் |
| பாதையில் வரும் |
| பனிக்காற்றும் பூஞ்சோலைகளும் |
| முட்செடிகளும் புதர்காடுகளும் |
| தோண்டிப் பார்க்கவே செய்கின்றன |
| புதைந்திருக்கும் நினைவுகளை |
| எனக்கான ஒவ்வொரு |
| விடியல்களிலும் பொழுதுகளிலும் |
| காலதேவன் முன் மண்டியிட்டு மன்றாடுகிறேன் |
| அத்தனை நினைவுகளையும் அள்ளிச்செல் என |
| ஆனாலும் நினைவெச்சங்கள் எச்சங்களாகவே |
| நிகழ்வின் கணங்களை அச்சுறுத்திக் கொண்டே…. |
காலத்தின் மறதி....
கனா கண்டவள் -
காயத்ரி
on Wednesday, November 18, 2009


4 comments:
alagai irukirathu...
நன்றி பிரமு... தொடர்ந்து வரவேற்கிறேன்...
Wonderful lines...
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க பிரியா... தொடர்ந்து வரவேற்கிறேன்...
Post a Comment
உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...