இரவுகள்...
கனா கண்டவள் -
கவிநா...
on Friday, November 12, 2010
சயனம் தொலைத்தே
சரிகின்றன என் இரவுகள்...
குருதியில் தோய்த்த
என் கனவுகளைக் கவர்ந்து
விடிகிறது வானம்...
எப்போதும் போல்
என்னைக்கடந்துபோகும் மேகங்களுக்குள்
இரக்கமற்ற புன்னகையுடன் நீ...!
10 comments:
சயனம் தொலைத்தே
சரிகின்றன என் இரவுகள்...
அருமைங்க!!!
சூப்பர் ...வாழ்த்துக்கள்
தங்களின் கவிதை நடை அடுத்த பரிணாம நிலையை அடைந்து விட்டதாக கருதுகிறேன்.
மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் சகோ
விஜய்
//எப்போதும் போல்
என்னைக்கடந்துபோகும் மேகங்களுக்குள்
இரக்கமற்ற புன்னகையுடன் நீ...!//
அருமை ரசித்தேன்...
கனவுக்குள்ளே
கத்திஎரியும் இரவுக்குள்
இறக்கம் காட்டட்டும் இனியவன்....
@ ஜெயசீலன்
மிக்க நன்றி நண்பரே... மீண்டும் வருக..
***
@ மதுரை சரவணன்
மிக்க நன்றி நண்பரே, முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்... மீண்டும் வருக..
***
@ விஜய்
இடைவிடாது நீங்கள் அளித்துவரும் ஊக்கமே இதற்கு காரணம். என் கவிதை வரிகளை படிப்பதோடு நின்றுவிடாமல் ஊன்றிக் கவனித்து, அதன் மாற்றங்களையும் உணரும் உங்களின் அன்பு உள்ளத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்... எப்போதும் எனக்கு வேண்டும் உங்கள் ஆசிகள் அண்ணா....
***
@ சீமான்கனி
வழக்கம் தவறாத உங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் நண்பரே. கவிதையான உங்கள் பின்னூட்டத்தை ரசித்தேன்.. மிக்க நன்றி, மீண்டும் வருக தோழரே....
கண்டிப்பாக ஆசிகள் உண்டு தங்கையே !
நல்ல திறமைகளை கண்டு ஊக்குவிக்காமல் போவது அறிவீனம்.
எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு நல்ல வாழ்வை அளிக்க வேண்டுகிறேன்.
விஜய்
ரொம்ப நல்லா இருக்குங்க...
Nice Poetry Kavina..Nice
எப்பவுமே எதையாவது தொலைட்சிட்டு தேடுறதே உங்களுக்கு வேலைய போச்சு.
//குருதியில் தோய்த்த
என் கனவுகளைக் கவர்ந்து
விடிகிறது வானம்...
நல்லா வாக்கிய அமைப்பு..!
@ விஜய்
// கண்டிப்பாக ஆசிகள் உண்டு தங்கையே ! //
நன்றி அண்ணா....
***
@ கமலேஷ்
நன்றிங்க கமலேஷ்.... மீண்டும் வருக...
***
@ அஹமது இர்ஷாத்
நன்றிங்க இர்ஷாத்.... மீண்டும் வருக...
***
@ சரவணகுமார்
என்ன செய்றது சரவணா? கண்டது கனவாச்சே! தேடித்தானே ஆகணும்.. மிக்க நன்றி சரவணா...
--
அன்புடன்
கவிநா...
Post a Comment
உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...