மேகக்காதலி...!
கனா கண்டவள் -
காயத்ரி
on Monday, April 26, 2010
மிதக்கும் மேகங்களில்
ஒருத்தியாய் நான்...
காற்றின் அசைவுக்கு நகர்வதாய் - உன்
காதலின் அசைவுக்கு இசைகிறேன்...
உன்னில் பருகிய காதலை
மண்ணில் பொழிகிறேன் மழையாக...
மண்ணைச்சேர்ந்த காதல் மழை
மீண்டும் என் மடிசேர்கிறது...
இதோ...
மிதக்கும் மேகங்களில் ஒருத்தியாய்
மீண்டும் நான் - உன்
காதலைப் பருகப்பருக...
தீராத தாகத்தில்...
படம் உதவி - நன்றி நண்பர் விஷ்ணு...
16 comments:
நான் தோத்துட்டேன்.நல்ல கற்பனை, அருமையான படம்.
// காதலைப் பருகப்பருக...
தீராத தாகத்தில்...
வார்த்தைகள் எளிமையாகவும், அருமையாகவும் இருக்கிறது.
:)
அருமையான கவிதை கவி ..
வித்தியாசமான கற்பனை ..
அருமையான வரிகள் ..
வாழ்த்துக்கள் தோழியே ..
இனியும் எழுதுங்கள் //
பிரியமுடன்
விஷ்ணு ..
எப்பொழுதும்போல் உங்கள் டச்
வாழ்த்துக்கள் சகோதரி
விஜய்
படித்ததும் அந்த மேகக்காதலி மீது ஒரு மோகக்காதலே வந்து விடுகிறது...அழகு கவிதை தோழி...வாழ்த்துகள்...
// காதலைப் பருகப்பருக...
தீராத தாகத்தில்... //
//மண்ணைச்சேர்ந்த காதல் மழை/
வாழ்த்துக்கள்.கவிதை அருமை.
//காற்றின் அசைவுக்கு நகர்வதாய் - உன்
காதலின் அசைவுக்கு இசைகிறேன்...
//
அருமையான வரிகள்... கற்பனையின் வெளிப்பாடு காற்றை போல.....
வாழ்த்துக்கள் சகோதரி
//வார்த்தைகள் எளிமையாகவும், அருமையாகவும் இருக்கிறது.//
ரொம்ப நன்றி சரவணா...
மிக்க நன்றி நண்பர் திரு. அசோக்...
//வித்தியாசமான கற்பனை ..
அருமையான வரிகள் .. //
மிக்க நன்றி நண்பர் விஷ்ணு... இந்த கவிதையின் அழகில் உங்களது பங்கு மிகப்பெரியது... நன்றி...
//எப்பொழுதும்போல் உங்கள் டச் //
மிக்க நன்றி நண்பர் திரு.விஜய்.. தொடரவேண்டும் உங்கள் ஆதரவு..
//படித்ததும் அந்த மேகக்காதலி மீது ஒரு மோகக்காதலே வந்து விடுகிறது...//
மகிழ்ச்சியாய் இருக்கிறது நண்பரே... மிக்க நன்றி திரு.சீமாங்கனி...
நன்றி திரு.கோழிப்பையன் ...
//கவிதை அருமை.//
மிக்க நன்றி திரு. மதுரை சரவணன்...
//கற்பனையின் வெளிப்பாடு காற்றை போல.....
வாழ்த்துக்கள் சகோதரி.//
மிக்க நன்றி உங்களின் வாழ்த்துக்களுக்கும், ரசனைக்கும்... நன்றி சகோதரரே... (இளவழுதி வீரராசன்...?
Post a Comment
உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...