திரும்பிப் பார்க்கிறேன் -- 2010


கடந்த வருடத்தில் (2010) நடந்த நிகழ்வுகளைப்பற்றி தொடர்பதிவெழுத  அழைத்திருந்தார் கௌசல்யா அக்கா. அவருக்கு என் நன்றிகள்.

இதுவரை கவிதைகள் மட்டுமே எழுதி வந்த என் வலைப்பூவில் வித்தியாசமான முதல் பதிவு இது.
என்னால் எழுத முடியுமா என்ற கேள்விக்குறியுடன் தான் ஆரம்பித்திருக்கிறேன்.

வலைப்பூ

2007 -ஆம் வருடத்திலேயே எனது வலைப்பூ பயணம் ஆரம்பித்திருந்தாலும், மற்ற நண்பர்களின் வலைப்பூக்களை அதிகம் வாசிக்க வாய்ப்பளித்தது இந்த 2010 தான். அந்த விதத்தில் இது எனக்கு மிகச்சிறந்த வருடம்.

அடுத்து, ஓவியக்காதல் என்ற என் இன்னொரு வலைப்பூவை துவங்கியதும் இந்த வருடம் தான்.

நட்புறவுகள்

பொதுவாகவே இணையம் என்றாலே பெண்களுக்கு ஏற்படும் பயத்துடன் தான் என் பயணமும் துவங்கியது. ஆனால், எனக்கு வாய்த்த சகோதர சகோதரிகள், தோழர் தோழிகள் அந்த ஐயத்தைத் துடைத்துவிட்டனர். கடந்த வருடத்தை திரும்பிப்பார்க்கும் வேளையில் என்றும் என்னுடன் கைகோர்த்து ஊக்கமளிக்கும் உள்ளங்களையும் நினைவுகளையும் நெஞ்சம் துடிக்கிறது.

நண்பர்கள் விஷ்ணு, விஜய், சீமாங்கனி, D.R.அசோக், சரவணன், கணேஷ் தோழிகள் தென்றல், ஹேமா, பூங்குழலி அக்கா, கௌசல்யா அக்கா இன்னும் பல உள்ளங்கள் என் எழுத்துக்களைப் படித்து அவற்றைச் செம்மைப்படுத்த ஊக்கமளிக்கின்றனர். அவர்களுக்கு என் நன்றிகளையும் சமர்ப்பிக்கிறேன்.

ரசிக்கும் எழுத்துக்கள்
 

நான் தொடரும் வலைப்பூக்கள் பெரும்பாலும் கவிதைகள் பற்றியதாகத்தானிருக்கும். அதில் சில விதிவிலக்குகள் என்றால், கணேஷ்-இன் வலைப்பூ, மற்றும் கௌசி அக்காவின் "மனதோடு மட்டும்".
கணேசின் நகைச்சுவை கலந்த அறிவியல் பிடிக்கும். கௌசி அக்காவின் மனதோடு பேசும் எழுத்துக்கள் பிடிக்கும்.
சரவனக்குமாரின் "பார்த்ததும் படித்ததும்" வலைப்பூ. அவர் படித்து ரசித்ததையெல்லாம் எழுதுகிறார். இப்போது கொஞ்ச நாட்களாக சுயமாக நிறைய விஷயங்களை பதிவிடுகிறார். சரவணன் எனக்கொரு நல்ல நண்பன்.
விஜய் அண்ணாவின் கவிதைகள், அவை என்னால் விமர்சிக்கமுடியாத உயரத்தில் இருப்பவை. அவரின் எழுத்துக்களைப் படிக்க நான் அகராதி ஒன்றை வாங்குவதாய் இருக்கிறேன். :)
இன்னும் நான் ரசிக்கும் பல வலைப்பூக்கள் இருக்கின்றன.

என் டைரி

நிகழ்வுகளைப் பதிய
நேரமில்லை
நினைவுகளைப் பதிகிறேன்
கவிதைகளாக்கி....

இணையம் 

இணையம் இன்னுமொரு தனி உலகம். எழுத, படிக்க, பகிர, மகிழ, அறிய, வாழ அத்தனைக்கும் வழிவகுக்கும் மற்றொரு பூமி.
இந்த பூமியில் காலாற உலவ 2011 நம்மை வரவேற்றிருக்கிறது. அனைவருக்கும் இவ்வருடம் இனிதாக அமைய நல்வாழ்த்துக்கள்...


தொடர்பதிவெழுத யாரையேனும் அழைக்கவேண்டுமே!!??

எனக்குத்தெரிந்த பலரையும் பலர் அழைத்துவிட்டதால் தொடர்பதிவின் இலக்கணத்தை மீறுகிறேன். மன்னிக்கவும்... :(


பின்குறிப்பு:-


வெற்றுப் பக்கங்களே
விதியாய்க் கொண்டு
என்னிடம் அடைக்கலமான
என் டைரி....


இந்த நிலை மாற,
இந்த வருடமாவது உருப்படியாக சொல்லும்படி எதாவது செய்வேன் என்ற நம்பிக்கையில் 2011 -ஆம் வருடத்தை பூத்தூவி வரவேற்கிறேன்... :)))

18 comments:

கணேஷ் said...

வெற்றுப் பக்கங்களே
இல்லா விதியைக்
கொண்டு என்னிடம்
அடைக்கலமான
என் டைரி..

அடுத்த வருடத்தில் இந்த மாதிரி கவிதை எழுதுங்கள்..சரியா..

சுருக்கமாக நல்லா சொல்லி இருக்கீங்க...

Kousalya Raj said...

அழகா நிறைவா எழுதி இருக்கிற காயத்ரி...

இந்த மாதிரி பதிவு எழுதுவது புதிது என்று குறிப்பிட்டாய் ஆனால் அப்படி தெரியவில்லை...வார்த்தைகள் கோர்வையாக வந்திருக்கிறது...

கவிதைக்கு நடுவில் இந்த மாதிரியான அனுபவ பதிவுகளும் எழுது...

// அவரின் எழுத்துக்களைப் படிக்க நான் அகராதி ஒன்றை வாங்குவதாய் இருக்கிறேன். :) //

ரொம்ப சரியாக சொல்லி இருக்கிற காயத்ரி....நான் அவர் தளம் சென்று படித்தாலும் கமெண்ட் என்ன போடனு திரு திருன்னு முழிச்சிட்டு வந்த தடம் கூட தெரியாம வந்திடுவேன். :)

தொடர இவரை மட்டுமாவது நீ அழைத்து இருக்கலாமே...!! இவரை பற்றி இன்னும் தெரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைத்து இருக்கும்.

thendralsaravanan said...

அழகான பதிவு அதில் தோழியாக என்னையும் சேர்த்தது இரட்டிப்பு மகிழ்ச்சி!
எண்ணஙகளின் பிரதிபலிப்பு தளமாக வலைப்பூ அமைகிறது!
என்னுடைய அச்சமும் உங்களுடையது போலவே இருந்து இப்போது நல்ல தேர்ச்சியடைந்ததை சொல்லித்தான் ஆக வேண்டும்.
நன்றி!

கமலேஷ் said...

வாழ்த்துக்கள்

தொடருங்கள்

ஹேமா said...

கவிநா...சுகம்தானே.அழகான பதிவு.வந்த வரும் அத்தனை சுபதினங்களும் அதிஷ்டத்தோடு வரட்டும் உங்களுக்கு !

Saravana kumar said...

நன்றி நன்றி நன்றி , இனிமேல் இந்த மாதிரியான அனுபவங்களையும் பகிர வேண்டும் என்பது இந்த அன்பு நண்பனின் வேண்டுகோள்..!

அன்புடன் நான் said...

உங்க பகிர்வு நல்லாயிருக்குங்க.... இவ்வாண்டு மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்.

விஜய் said...

எழுத்து நடை நன்றாக உள்ளது. கவிதை எழுதும் பலருக்கு (நான் உட்பட ) உரைநடை சிறக்காது. உனக்கு வாய்த்திருக்கிறது.

அடிக்கடி இதுபோல் எழுதவும்.

இவ்வருடம் எல்லாவிதத்திலும் சிறப்புற ஆண்டவனை இறைஞ்சுகிறேன்.

வளர்க தமிழுடன்

@ கௌசல்யா
நான் ரொம்ப சாதாரணமானவன்க, பெரிய தமிழறிஞர்னு நினைச்சிடாதீங்க !!!
இனிமே புரியற மாறி எழுதுறேங்க

விஜய்

கவிநா... said...

@ கணேஷ்

நன்றிங்க கணேஷ்... நிச்சயமாய் எழுதுவேன் அடுத்த வருடம்.

கவிநா... said...

@ கௌசல்யா அக்கா

ரொம்ப நன்றி அக்கா... கண்டிப்பா அனுபவப் பதிவுகளும் எழுதறேன் இனிமேல்.

விஜய் அண்ணா பத்தி நீங்க சொன்னது சரிதான்.

கவிநா... said...

@ தென்றல் சரவணன்

உண்மைதான் தோழி. அந்த பயம் உங்களுக்கும் விலகியதில் மகிழ்ச்சி.. :)))
மிக்க நன்றி தோழி...

கவிநா... said...

@ கமலேஷ்

மிக்க நன்றிங்க. உங்க அன்புக்கு.

கவிநா... said...

@ ஹேமா..

மிக்க நலம். நன்றி கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் தோழி....

கவிநா... said...

@ சரவணகுமார்

கண்டிப்பா இது தொடரும் சரவணா....

கவிநா... said...

@ கருணாகரசு...

மிக்க நன்றி சகோ. முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்...

கவிநா... said...

@ விஜய்

மோதிரக்குட்டு என்பது போல், உங்கள் பாராட்டு எனக்கு.... மிக்க நன்றி அண்ணா... எல்லாம் உங்கள் ஆசிகள்...

Vishnu... said...

அருமை கவி ..
அழகான எழுத்து நடை ..

என்னையும் உனது நண்பர்கள் வரிசையில் இதில் இணைத்து கொண்டமைக்கு நன்றி கவி ..

வெற்றுப் பக்கங்களே
இல்லா விதியைக்
கொண்டு என்னிடம்
அடைக்கலமான
என் டைரி..

அப்போ அந்த டயரியில் அனைத்தும் கவிதைகளா கவி ??

என்றும்
பிரியமுடன்
விஷ்ணு ,....

jayakumar said...

eppadithaan ipadi ellam decorate panringalo...enakku theriyala...poraamaiya irukku...

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...