உன் நினைவுகளைப் பதியமிட்டு
கண்ணீரூற்றி வளர்க்கிறது பிரிவு...
நம் காதலை...
என் முட்பாதையிலும்
பூக்கள் முளைக்கிறது...
இந்தப் பாலை மனத்திலும்
சோலை மணக்கிறது...
உணர்வுக்கருவில்
உதித்த இம்மலருடன்
உனக்கெனச் செய்வேன்
ஓர் இதயத்தவம்...
நீ வரும் வழி நோக்கி...!!!
Image Courtesy:- Google.
9 comments:
Very superb kavithai pa this picture also very nice. But one thing i dont know while seeing the picture u creating kavithai or after creating u find out the picture.....
//இந்தப் பாலை மனத்திலும்
சோலை மணக்கிறது...//
கலக்கல் கவிதை....
ம்ம ம் நோக்குங்க...))
உன் நினைவுகளைப் பதியமிட்டு
கண்ணீரூற்றி வளர்க்கிறது பிரிவு...
நம் காதலை...///
உண்மையில் நடக்குமா இப்படி???
நல்லா இருக்குங்க கவிதை..எப்போதும் போல் கவிதைக்கு மிக பொருத்தமான படம்..
நல்ல காத்திருப்பு!தொடரட்டும்.
காதலின் பிரிவில் பூத்த இதயம்...ஆஹா...அழகு வாழ்த்துகள்...தோழி
காதலின் பிரிவில் பூத்த இதயம்...ஆஹா...அழகு வாழ்த்துகள்...தோழி
//பூக்கள் முளைக்கிறது..//
அது எப்படி ? செடிதானே முளைக்கும் ?டவுட்டு#
//சோலை மணக்கிறது..//
சோலை எப்படி ? அங்கே இருக்கிற பூக்கள் தானே மணக்கும் ? டவுட்டு#
//உதித்த இம்மலருடன்//
பூ எப்படி உதிக்கும்? டவுட்டு#
ம்...
ஓ இது காதல் ? அதுதான் எல்லாம் கொஞ்சம் மாறி போச்சு !! :))
கணேஷ் @@
//நல்லா இருக்குங்க கவிதை//
அட, உனக்கு கவிதை ரசிக்க தெரியுமா ? இப்பதான் தெரியுது. உன் பிளாக் பக்கம் போறதே இல்லையா ? :))
காயத்ரி உன் கவிதை அழகு...படம் சரியான தேர்வு...
தாமதமாக வந்ததுக்கு பொறுத்துக்கோ.
//கணேஷ் @@
//நல்லா இருக்குங்க கவிதை//
அட, உனக்கு கவிதை ரசிக்க தெரியுமா ? இப்பதான் தெரியுது. உன் பிளாக் பக்கம் போறதே இல்லையா ? :))//
என் தோழி கௌஸ் சொன்னதையே நானும் சொல்கிறேன்...ரிப்பீட்டு...:))))
அழகான படம்..அழகான கவிதை...அழகான டெம்ப்ளேட் ....எல்லாமே அழகு கவிநா:)))
Post a Comment
உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...