பாதங்கள்…




கருவறையை உதைத்து
கவலைகளை உடைத்து
அறிவைத் தேடி அன்பைத் தேடி
ஒரு பயணம்…

கல்வியைத் தேடி காதலைத் தேடி
ஒரு பயணம்…

பொருளைத் தேடி புகழைத் தேடி
ஒரு பயணம்…

பொறுப்புகள் சுமந்து புண்ணியம் தேடி
ஒரு பயணம்…

கருவறை தொடங்கி
கல்லறை நோக்கி
பாதங்களின் பயணம்…
தேடல்களின் பயணம்…

4 comments:

Nagai.S.Balamurali. said...

வணக்கம்! தங்களது கவிதைகளும் கருத்துகளும் சிறப்பாக உள்ளன.
வாழ்த்துக்கள்!

காயத்ரி said...

மிக்க நன்றிங்க பாலா.... உங்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்... மீண்டும் வருக...

ராமலக்ஷ்மி said...

அருமை.

Anonymous said...

Hi Gayathri.. your poems are really good.

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...